காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை: சபாநாயகர் முடிவு
டெல்லி: மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்காமல் இருக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக 44 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 2ம் இடத்தை பிடித்தது. 543 உறுப்பினர் பலம் கொண்ட மக்களவையில் குறைந்தபட்சமாக, பத்து சதவீதமான 54 எம்.பிக்களாவது இருந்தால்தான் அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். அல்லது எந்த கட்சிக்கும் அந்த அஸ்தஸ்தை வழங்காமல் இருக்க சபாநாயகரால் முடியும்.

எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய, சுமித்ரா மகாஜன் எந்த கட்சிக்கும் அந்த அந்தஸ்தை வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற கட்சியின் மக்களவை குழு தலைவர் எதிர்க்கட்சி தலைவராக முடியும். அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளும் அவருக்கும் கிடைக்கும். ஆனால் எப்படியும் தங்களுக்கு அந்த பதவி கிடைக்காது என்பதால் ராகுல்காந்திக்கு பதிலாக, மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக கர்நாடக எம்.பியான மல்லிகார்ஜுனகார்கேவை சோனியாகாந்தி நியமித்திருந்தார்.
சுதந்திரத்துக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் பலத்துடன் ஆட்சியமைத்தது. அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை காணப்பட்டது. அந்த வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications