மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. தேர்தல் ஆணையம் 'பொளேர்'
உத்தரப்பிரதேச தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று மாயாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜக 322 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது பாஜக.

ஆளும் சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை இணைந்து 54 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. அதில் எந்த பொத்தானை அழுத்தி வாக்களித்தாலும் அவை அனைத்தும் பாஜகவுக்கு சேர்ந்துவிடும் வகையில் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இந்த முடிவுகள் நம்பும்படியாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து. பெரும்பாலான முஸ்லிம் தொகுதிகளில் அவர்கள் அளித்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தி மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்குக் புகார் கடிதம் எழுதியுள்ளதாக மாயாவதி தெரிவித்தார்.
இந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை எனவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications