மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. தேர்தல் ஆணையம் 'பொளேர்'
உத்தரப்பிரதேச தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று மாயாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜக 322 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது பாஜக.

ஆளும் சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை இணைந்து 54 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. அதில் எந்த பொத்தானை அழுத்தி வாக்களித்தாலும் அவை அனைத்தும் பாஜகவுக்கு சேர்ந்துவிடும் வகையில் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இந்த முடிவுகள் நம்பும்படியாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து. பெரும்பாலான முஸ்லிம் தொகுதிகளில் அவர்கள் அளித்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தி மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்குக் புகார் கடிதம் எழுதியுள்ளதாக மாயாவதி தெரிவித்தார்.
இந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை எனவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications