இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை: ஆர்.எஸ்.எஸ்.க்கு மத்திய அரசு பதில்
டெல்லி: இடஒதுக்கீட்டு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.

மேலும் முடிந்தால் மத்திய மோடி அரசு இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து பார்க்கட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகிய பிரிவினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுகீட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை அரசு ஏற்கவில்லை. பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்று மத்திய அரசு கருதுகிறது.
ஆகையால் இட ஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய வேண்டிய எந்த தேவையும் இல்லை.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.












Click it and Unblock the Notifications