மன்மோகன் சிங்கை விமர்சித்ததற்காக மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை: வெங்கையா நாயுடு திட்டவட்டம்
டெல்லி: மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத்தொடரின் தொடக்க நாள் முதலே காங்கிரஸ் எம்.பிக்கள் மன்மோகன்சிங் விமர்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் மீண்டும் அவை கூடிய நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கடும் எரிச்சலடைந்த அவைத்தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, இவ்விவகாரத்தில் யாரும் மன்னிப்பெல்லாம் கேட்கப்போவதில்லை என்று கோபமாக தெரிவித்தார். நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் மாநிலங்களவையை கேலிக்கூடாரமாக்க வேண்டாம் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

குஜராத் தேர்தலின் போது தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, பாஜகவை அழிக்கவும், தேர்தலில் தோற்கடிக்கவும் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுடன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக குற்றஞ்சாட்டினார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பிக்கள், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரு அவைகளிலும் கோஷங்களை எழுப்பினர். மாநிலங்களவையில் எம்.பிக்களின் தொடர் அமளியால் கோபமடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் பேசவில்லை என்றும், அதனால் அவரோ அல்லது அவரின் சார்பாகவோ யாரும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications