கடலை ரசிக்கலாம்னு போனா குடலை உருவிருவாங்க போலயே!
மங்களூர்: கடலோரக் கர்நாடகம் அவ்வளவு அழகானது.. ஆனால் அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பார்கள். அதை மெய்ப்பிப்பது போல கடலோர கர்நாடக மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறதாம். ஒரு ஆண்டில் மட்டும் அங்கு 217 கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்சின் கன்னடா (தென் கன்னடா), உடுப்பி, உத்தர கன்னடா (வட கன்னடா) ஆகிய மாவட்டங்கள்தான் கடலோரக் கர்நாடக மாவட்டங்களாகும். இயற்கை எழில் கொஞ்சும் அருமையான பகுதி இது.
ஆனால் இன்று ரத்தம் உறிஞ்சும் காட்டேறிகள் வலம் வரும் தலமாக மாறியுள்ளன இந்த மாவட்டங்கள். 2014 நவம்பர் முதல் இந்த நவம்பர் மாதம் வரையிலான ஒரு வருட காலத்தில் அங்கு 217 கொலைகள் நடந்துள்ளனவாம்.

2014ல்
2014ம் ஆண்டு மட்டும் அங்கு 100 கொலைகள் நடந்துள்ளன. 2015ம் ஆண்டு இதுவரை 117 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டான் கொலை 4 தான்
இதில் தாதாக்கள், ரவுடிகளுக்கிடையே நடந்த கொலை 4 மட்டுமே. எனவே கொலையானவர்களில் பெரும்பாலானோர் சாதாரணர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தாதாக்கள் ராஜ்ஜியத்தில்
இத்தனைக்கும் கடலோர கர்நாடக மாவட்டங்களில் தாதாக்கள் ஆதிக்கம் அதிகம். ஆனால் அவர்கள் அதிகம் சாகாமல், அப்பாவிகளும், பிறரும் அதிக அளவில் கொலையாகியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

341 பேர் கைது
217 கொலைகள் தொடர்பாக இதுவரை 341 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த 100 கொலைகள் தொடர்பாக 196 பேரும், 117 கொலை தொடர்பாக 145 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு ரோந்து அதிகரிப்பு
கொலைகள் குறையாமல் தொடர் கதையாகி வருவதால் கடலோரப் பகுதி்களில் இரவு நேர ரோந்தை அதிகரிக்குமாறு கர்நாடக அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம். மேலும் கடலோரக் கிராமங்களில் அதிக அளவில் போலீஸார் உளவு பார்க்கவும் ஆரம்பித்துள்ளனராம்.
கடலை ரசிக்கலாம்னு போனா குடலை உருவிருவாங்க போலயே!
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications