விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க மத்திய அரசு முடிவு!
விளையாட்டு சங்கங்களில் இருந்து அரசியல்வாதிகளை விரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: நாட்டின் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம்பெறுவதைத் தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டு சங்கங்கள் நீண்ட காலமாக அரசியல்வாதிகள் கையில்தான் இருக்கின்றன. கிரிக்கெட் சங்கங்களுடன் அரசியல்வாதிகளான சரத்பவார், பரூக் அப்துல்லா, ராஜீவ் சுக்லா, ஜோதிராதித்ய சிந்தியா, கால்பந்து சங்கத்துடன் பிரபுல் படேல் என பெரிய பட்டியலே நீள்கிறது.

லோதா கமிட்டி
டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் தற்போதைய மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி நிர்வாகியாக இருந்த போது முறைகேடு நடந்தது என ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியிருந்தது. மேலும் ஐபிஎல் முறைகேடு தொடர்பான லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

அரசியல்வாதிகளுக்கு தடை
அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாக அமைப்பில் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் இடம்பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் உருவாக்கி இருந்தது.

வீரப்ப மொய்லி கேள்வி
அப்போது காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி, எதற்காக அரசியல்வாதிகள், விளையாட்டு அமைப்புகளில் இடம்பெற வேண்டும்? இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இது தொடர்பாக சட்டம் கொண்டுவர தாம் முயற்சித்த போது அமைச்சர்கள் பலருமே இதை எதிர்த்தனர் என்றும் போட்டுடைத்திருந்தார்.

மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகள் இடம்பெறுவதை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications