மானிய கேஸ் சிலிண்டர் விலை உயராது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
டெல்லி: மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றார்.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரும் மானியம் தொடரும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பொதுமக்கள் மீது அரசு சுமையை ஏற்றவிரும்பவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேசமயம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்று கூறிய தர்மேந்திரபிரதான், அவற்றின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.