பாஜகவுக்கு ஆதரவா? அந்த பேச்சுக்கே இடம் இல்லை.. அர்விந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்!!
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், ஜன் லோக்பால் மசோதாவை வரும் 29-ந் தேதி நிறைவேற்றுவோம் என பாஜக எழுத்துப்பூர்வ உறுதி மொழி கொடுத்தால் அக்கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த கருத்தை நிராகரித்திருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், இது பூஷனின் தனிப்பட்ட கருத்து. பாஜகவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷனும் தாம் நேற்று தெரிவித்த கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications