பஸ்ஸையே ”அலேக்”காய் தூக்கி இருவர் உயிரைக் காப்பாற்றிய புனே வாசிகள்!
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்தின் கீழே சிக்கிக் கொண்ட இருவரை மக்கள் பேருந்தையே புரட்டி காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த வெள்ளியன்று புனே மகா நகர் பரிவாகன் மகா மண்டல் கழகத்தை சேர்ந்த பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
அதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் பேருந்தின் கீழ் சிக்கிக்கொண்டனர்.
சிவப்பு விளக்கு சிக்னல்:
புனே நகரில் உள்ள க்யானேஸ்வர் படுக்கா சவுக் சிக்னலில் பேருந்து வந்துகொண்டிருந்த போது சிக்னலில் சிகப்பு விளக்கு போடப்பட்டது.
இரு சக்கர வாகனம்:
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக வந்த பேருந்து இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.
பேருந்தில் மாட்டிய இருவர்:
இதில் அஸ்வின் தோஷி மற்றும் சித்தார்த் டுடு ஆகிய இருவரும் பேருந்துக்கு கீழே வகையாக சிக்கிக்கொண்டனர்.
அலேக்காய் தூக்கிய மக்கள்:
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுதாரித்து ஏராளமானோரை துணைக்கு அழைத்து பேருந்தை அலேக்காக தூக்கினர். கிட்டதட்ட 50 பேர் இந்த செயலை செய்தனர்.
மீட்கப்பட்ட வாலிபர்கள்:
பொதுமக்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் பேருந்துக்கு கீழே இருந்த இருவரும், விரைவாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டனர்.
இருவரும் உயிர்பிழைப்பு:
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புத்திசாலி புனே வாசிகள்:
புனே மக்களின் இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கையால்தான் இரண்டு உயிர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டுள்ளன.
பெர்த் சம்பவ பாதிப்பு:
சமீபத்தில் இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபரை மீட்க ரயிலையே ஆயிரக்கணக்கான பயணிகள் சேர்ந்து கவிழ்த்து மீட்டனர். அதேபோல இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications