For Daily Alerts
Just In
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறு தேர்தல் கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: தேர்தல்களில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்களில் எந்த வாக்காளர்களுக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்காக நோட்டா என்ற பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் புறக்கணிப்பு என்பது கணிசமாக குறைந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு.
இந்நிலையில் தேர்தல்களில் எந்த வாக்காளர்களுக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
English summary
The Supreme Court on Monday refused to direct the Election Commission to hold fresh polls in case the majority of the electorate exercises ‘None Of The Above Option' (NOTA) option recently introduced on its direction to allow voters to reject all the candidates.
Story first published: Monday, November 25, 2013, 13:35 [IST]