அதீத அன்பால் கன்னியாஸ்திரியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தோழி... கேரளாவில் பயங்கரம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கன்னியாஸ்திரிகள் மடத்தில் அதீத அன்பு காரணமாக தனது தோழியை மற்றொரு கன்னியாஸ்திரி மாணவியே எரித்துக் கொல்ல முயற்சி செய்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே பரவூரில் 9 மாணவிகள் படிக்கும் கன்னியாஸ்திரிகள் மடம் ஒன்று உள்ளது. இதில்,அதேபகுதியைச் சேர்ந்த டெல்பி (24) மற்றும் ரேச்சல் (21) என்ற மாணவிகள் ஒன்றாக தங்கி படித்து வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்து வரும் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.
ஆனால், கடந்தமாதம் பயிற்சிக்காக டெல்பியை மற்றொரு மாணவியுடன் சேர்த்து மூன்று மாதங்கள் ஆந்திரா அனுப்பி வைக்க மட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சண்டையின் போது டெல்பியை ரேக்சல் அடித்துள்ளதாகத் தெரிகிறது.
தோழியை பிரிய மனமில்லாமல் தவித்த ரேக்சல், தோழியின் ஆந்திர பயணத்தை தடுத்து விட திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி சமையலறை பணியில் இருந்த ரேச்சல் யாருக்கும் தெரியாமல் மண்ணெணெய்யை எடுத்து மறைத்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று இரவு தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த டெல்பி மீது, சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து ஊற்றிய ரேச்சல், தீயை பற்ற வைத்து விட்டு ஓடி விட்டார்.
டெல்பியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த மற்ற மாணவிகள் மடத்தின் நிர்வாகிகள் உதவியுடன் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டெல்பியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 45 சதவீதம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருவனந்தபுரம் போலீசில் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், ரேச்சல் கைது செய்யப் பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications