காஷ்மீர் எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதை "ரிட்டர்ன்" செய்தார்!
ஸ்ரீநகர்: சாகித்ய அகாடமி விருது திரும்பத் தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இன்று காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான குலாம் நபி காயல் தனது விருதைத் திரும்பத் தருவதாக அறிவித்தார்.
நாட்டில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை. மிரட்டப்படுகிறார்கள். அச்ச உணர்வுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே எனது விருதைத் திரும்பத் தருகிறேன் என்று குலாம் காயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது விருதைத் திரும்பத் தருகிறேன். நாட்டில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மிரட்டப்டபுவதாக உணர்கிறார்கள்.அச்ச உணர்வுடன் வாழும் நிலை உள்ளது. தங்களது எதிர்காலம் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள் என்றார் அவர்.
1975ம் ஆண்டு தனது காஸிக் மினார் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர் காயல். விரைவில் எனது விருதையும், ரொக்கப் பரிசையும், பட்டயத்தையும் நான் திருப்பி அனுப்பி விடுவேன் என்றும் காயல் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுபான்மையினரை காக்க வேண்டியது அரசின் கடமை. அதிலிருந்து அது தவறி விட்டது. இதுபோன்ற செயல்களை நான் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. எனவேதான் விருதைத் திரும்பத் தர முடிவு செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களது விருதைத் திரும்பித் தந்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் தனது விருதைத் திரும்பத் தருவது இதுவே முதல் முறையாகும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications