நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) இயக்கத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

மியான்மர், இந்தியாவில் உள்ள நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து (நாகாலிம்) என்ற தனிநாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வரும் அமைப்புகள் என்.எஸ்.சி.என் எனப்படும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில். இந்த அமைப்பு 1980களில் ஐசக் மூய்வா, மற்றும் கப்லாங் ஆகியோர் தலைமையில் 2ஆக பிளவுபட்டது.

NSCN(K) banned for five years

இதில் மூய்வா தலைமையிலான அமைப்பினர் மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடி முன்னிலையில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் இந்த மூய்வா பிரிவு கையெழுத்திட்டிருந்தது.

ஆனால் கப்லாங் தலைமையிலான என்.எஸ்.சி.என். இயக்கத்தின் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் அண்மையில் இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 18 ராணுவத்தினர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் கப்லாங் தலைமையிலான என்.எஸ்.சி.என். இயக்கத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தலைவரான கப்லாங் சீனா அல்லது மியான்மர் எல்லையோரத்தில் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கப்லாங் பற்றி தகவல் தருவோருக்கு ரூ7 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+