அதிமுக நாங்கதான் ... இரட்டை இலை எங்களுக்கே - தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் முறையீடு
உண்மையான அதிமுகவான தங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
டெல்லி: நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து இன்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முறையிட்டனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டது. இந்நிலையில் தாங்களே உண்மையான அதிமுக என்று இருவரும் மல்லுக்கட்டுகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியானது அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவில் உள்ள விதியாகும்.

தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.

சசிகலா பதில் மனு
பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்தனர்.

டெல்லி பயணம்
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்ய ஓ.பன்னீர் செல்வம் அணியினர் டெல்லி சென்றுள்ளனர்.

யார்? யார்?
ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.

என்ன பேசினர்?
இந்த சந்திப்பின்போது தாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தங்களுக்கே உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் உள்ளதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications