ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அமோகம்- தொடர்ந்து 5-வது முறை முதல்வராகும் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷா முதல்வராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார்.
1997-ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜூ ஜனதா தளத்தை உருவாக்கினார் நவீன் பட்நாயக். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தொடர்ந்து வெற்றி முகம்
பின்னர் 2000-ம் ஆண்டு ஒடிஷாவின் முதல்வரானார் நவீன்பட்நாயக். 2000-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து 4 சட்டசபை தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்து வந்தது.

முன்னிலையில் பிஜூ ஜனதா தளம்
தற்போதைய தேர்தலிலும் 147 தொகுதிகளிலும் போட்டியிட்டது பிஜூ ஜனதா தளம். தற்போதைய தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கிறது.

மீண்டும் முதல்வர்
தொடர்ந்து 5வது முறையாக ஒடிஷாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். அதேபோல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று வந்துள்ளது.

லோக்சபா தேர்தலிலும் வெற்றி
தற்போது மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 14-ல் பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜகவால் அசைக்கவே முடியாத மாபெரும் சக்தியாக திகழ்கிறது பிஜூ ஜனதா தளம்.












Click it and Unblock the Notifications