பாய்லின் புயல் தாக்கிய ஒடிஷாவில் வெள்ளம்: 47 பேர் பலி, 1.2 கோடி பேர் தவிப்பு
புவனேஸ்வர்: ஒடிஷாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாய்லின் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை மற்றும் வெள்ளத்தால் கஜபதி, கந்தமால், குர்தா, பூரி, கட்டாக், ஜகத்சிங்பூர், பத்ரக், பலசூர், மயூர்பஞ்ச் மற்றும் நயாகர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தின் 129 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications