ஒடிசா: மாவோயிஸ்டுகள் அட்டூழியம் பஞ்சாயத்து அலுவலகம் குண்டு வீசி தகர்ப்பு
Subscribe to Oneindia Tamil

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள படியாவில் வட்டார பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்களில் பெண்களும் இருந்தனர்.
முன்னதாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கட்டிடம் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினார்கள். அதில் கட்டிடத்தில் ஆஸ்பேஸ்டால் கூரைகளில் ஆன 5 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. அதனால் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் தன்தாவேஜீகள் நாசமாயின.
வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள் அங்கு போஸ்டர்களை வீசி விட்டு சென்றனர். அதில் கடந்த செப்டம்பரில் போலீசார் நடத்திய தாக்குதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கையை கைவிடக் கோரியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications