ஃபேஸ்புக்கில் ஆபாச படம்: அவமானத்தில் தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவி
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக்கில் தனது ஆபாச படங்கள் வெளியானதை பார்த்து அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிஷா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டுக்கு பின்புறம் குளிக்கையில் அதை அதே ஊரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி அவருடன் உறவு கொண்டுள்ளார்.
உறவு கொண்டதை புகைப்படம் எடுத்த அந்த வாலிபர் அதை தனது நண்பர்களிடம் காண்பித்ததுடன், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை கிராம பஞ்சாயத்தாரை அணுகி நியாயம் கேட்டுள்ளார்.
பஞ்சாயத்தாரோ சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதற்கிடையே அந்த சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சிறுமி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அந்த வாலிபர் உள்ளூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications