ஒடிஷாவில் ரூ1.4 கோடி பறிமுதல்- 8 பேர் கைது
ஒடிஷாவில் கணக்கில்வராத ரூ1.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் கணக்கில் வராத ரூ1.43 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் சந்தேக நபர்களிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ1.43கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ரூ80 லட்சத்துக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தது. எஞ்சியவை ரூ100மற்றும் ரூ500 நோட்டுகளாக இருந்தன. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications