மாவோயிஸ்டுகள் 'கோட்டையில் கரையை கடக்கும் ஹூட்ஹூட் புயல்... என்ன செய்யப் போகிறது ஒடிஷா அரசு?
ராயகடா: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் மாவட்டங்களில்தான் ஹூட்ஹூட் புயல் கரையைக் கடக்க காத்திருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு பாய்லின் புயலின் போது செயல்பட்டது போல் ஒடிஷா அரசு சிறப்பாக இயங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் இதே நாட்களில்தான் ஒடிஷாவின் கோலாப்பூரை தாக்கி கரையை கடந்தது பாய்லின் புயல். கடந்த முறை போலவே தாய்லாந்து கடற்பரப்பில் காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த வாரம் உருவானது. அதன் பின்னர் கடந்த ஆண்டைப் போலவே மெதுமெதுவாக நகர்ந்து அந்தமான் அருகே மையம் கொண்டிருக்கிறது.

ஒடிஷா மற்றும் ஆந்திரா கடற்கரையை வரும் சனிக்கிழமை இரவு முதல் இந்த ஹூட் ஹூட் புயல் தாக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாய்லின் புயல் தாக்கிய போது முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உயிர்சேதத்தை தவிர்த்தது ஒடிஷா மாநில அரசு.
ஆனால் இம்முறை அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடி இனமக்கள் அதிகம் வாழுகிற மாவோயிஸ்டுகள் கோட்டையான கோரபுட், மல்காங்கிரி, ராயகடா மற்றும் கஜபதி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சம் மற்றும் கலஹாண்டி மாவட்டங்களின் பல பகுதிகளில் புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இவை அனைத்துமே மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிக்க மாவட்டங்கள். இதனால் இப்பகுதிகளில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அரசு நிர்வாகத்தை மாவோயிஸ்டுகள் அனுமதிப்பார்களா? என்பதும் தெரியாத நிலையில் ஹூட் ஹூட் புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒடிஷாவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications