பாஜகவில் இணைந்தால் உடனடி ஜாமீன்.. ரூ. 20 கோடி பணம்.. டீல் பேசிய என்ஐஏ.. பரபரப்பு குற்றச்சாட்டு
திஸ்பூர்: பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் 20 கோடி ரூபாய் தருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் டீல் பேசியதாக சமூக ஆர்வலர் அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றன. குறிப்பாக, என்ஆர்சிக்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் அகில் கோகோய். தகவலறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) ஆர்வலரான இவர் போராட்டத்தை முன்னெடுத்தார்.

திடீர் கைது
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது டைரி, வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர். அவருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி என்ஐஏ கைது செய்தது. நீண்ட நாட்கள் அவர் சிறையிலேயே உள்ளார்.

பேரம் பேசிய என்ஐஏ
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "முதலில் என்ஐஏ அதிகாரிகள் என்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய வலியுறுத்தினார்கள். நான் மறுத்ததால் பாஜகவில் இணையச் சொன்னார்கள். பாஜகவில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், வரும் தேர்தலுக்குப் பின் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் பாஜகவுக்கா பேரம் பேசினார்கள்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரூ. 20 கோடி லஞ்சம்
இருப்பினும், அதற்குத் தான் உடன்பட மறுத்ததால் பல்வேறு பொய் வழக்குகள் தன் மீது போடப்பட்டதாகவும் இதனால் உச்ச நீதிமன்றத்தில் கூட தனக்கு ஜாமீன் கிடைக்க பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையில் தன்னை உடல் மற்றும் மனரீதியாக என்ஐஏ அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும் அவர் கூறினார். மேலும், 20 கோடி ரூபாய் வரை தனக்கு என்ஐஏ அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாஜக மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. இத்தனை காலம் அமைதியாக இருந்தவர் இப்போது மட்டும் ஏன் இப்படிப் பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விரைவில் அசாம் தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்காளர்களை ஏமாற்ற அவர் இப்படிச் சொல்வதாகவும் அசாம் மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத என்ஐஏ அதிகாரி ஒருவரும் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
-
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி?












Click it and Unblock the Notifications