மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் ராஜினாமா !
இம்பால்: மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தலை அடுத்து ஒக்ராம் இபோபி சிங் தனது முதல்வர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் எந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், பாஜக பிற கட்சிகளின் ஆதரவுடன் 32 பேரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

இதனிடையே, பாஜக சட்டமன்ற குழு தலைவராக பிரேன் சிங் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உரிமை கோரவுள்ளார். அவரே முதல்வராக பதவியேற்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
எனவே புதிய அரசு அமைக்க வசதியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி முதல்வர் ஒக்ராம் இபோபிசிங்கை அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications