ஜம்மு காஷ்மீர் பி.டி.பி- பா.ஜ.க. அரசு என்னை வேவு பார்க்கிறது: ஒமர் அப்துல்லா பரபரப்பு புகார்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி- பா.ஜ.க. தலைமையிலான அரசு தம்மை உளவு பார்க்கிறது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒமர் அப்துல்லா கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் ஆளும் முப்தி அரசு என்னை உளவு பார்த்து வருகிறது. என்னை பேட்டி எடுத்த ஒரு தேசிய நாளிதழின் செய்தியாளர், எனது வீட்டு கேட்டை தாண்டியதும், சிஐடி போலீசாரல் தடுத்து நிறுத்தப்பட்டு என்ன காரணத்திற்காக அங்கு சென்று வந்தீர்கள் என விசாரிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக தெரிந்துகொள்ள விரும்பினால், என்னிடம் கேட்டு இருக்கலாம்.
Mufti Govt brazenly spying on me. A journalist interviewing me for a national daily just got stopped right outside my gate by CID person.
— Omar Abdullah (@abdullah_omar) September 4, 2015 நீங்கள் இவ்வாறு செய்தால் நான் அஜாக்கிரதையாக நடந்து கொள்ள மாட்டேன். எனது வீட்டுக்கு வெளியே செல்லும் நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு பதிலாக முப்தி முகம்மது சயீத் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்
இவ்வாறு ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications