சியாச்சினில் கடுங்குளிரால் மாதம் 2 ராணுவ வீரர்கள் பலியாகும் அவலம்
ஸ்ரீநகர்: சியாச்சின் போர் முனையில் கடுங்குளிரை தாங்க முடியாமல் மாதம் 2 வீரர்கள் மரணிக்கும் அவலம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் தான் உலகின் மிக உயரமான போர் முனை. அங்கு பணியாற்றும் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விட கடுங்குளிரை எதிர்த்து தான் முதலில் போராட வேண்டியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை தடுத்து நிறுத்த கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு சியாச்சினில் இந்திய வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
சியாச்சினில் வீரர்களுக்கு கடுங்குளிரால் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது.

வீரர்கள்
சியாச்சினில் பணிபுரியும் இந்திய வீரர்களில் மாதத்திற்கு இருவர் பலியாகி வருகிறார்கள். வீரர்கள் எதிரிகளால் கொல்லப்படவில்லை. மாறாக கடுங்குளிரால் பலியாகி வருகிறார்கள்.

869 பேர்
கடந்த 1984ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சியாச்சினில் குளிரால் 869 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த தகவல் லோக் சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

883 வீரர்கள்
சியாச்சினில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 9 வீரர்கள் பலியாகினர். பனியில் இருந்து மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா மருத்துவமனையில் மரணம் அடைந்தார். மேலும் இந்த ஆண்டு சியாச்சினில் 4 வீரர்கள் இறந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை சியாச்சினில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது.

குறைவு
குளிரால் பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 24 ஆக இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2015ல் 5 ஆக குறைந்துள்ளது என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 6, 566 கோடி
2012-2013 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளில் சியாச்சினில் இருக்கும் வீர்களின் உடைகள் மற்றும் மலையேறும் உபகரணங்களுக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 566 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
சியாச்சினில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பனி, கடுங்குளிரால் பலியாகி வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. இதில் 140 பேர் பலியாகினர்.

பிரச்சனை
சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஞாபக மறதி, பேச்சு குளறல், நுரையீரல் தொற்று, மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் போர் முனையில் உள்ள வீரர்களுக்கு தேவைப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications