பெங்களூர் மாநகராட்சியின் 3ல் 1 பங்கு கவுன்சிலர்கள் 10ம் வகுப்பு கூட படிக்காதவர்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர்களாகியுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு குறைவாக படித்தவர்களாக உள்ளனர்.

பெங்களூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 198 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 100 வார்டுகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 76 வார்டுகளையும், மஜத 14 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது.

One-third of new corporators studied SSLC or below

198 கவுன்சிலர்களில் 53 பேர் எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கும் கீழே படித்தவர்கள்தான். அதில் 25 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். 19 பேர் காங்கிரசையும், 9 பேர் மஜதவையும் சேர்ந்தவர்கள்.

18 கவுன்சிலர்கள், தொடக்க கல்வி அல்லது இடைநிலை கல்வி மட்டுமே முடித்தவர்கள். இந்த 18 பேரில் ஒருவரான, ஆடுகோடி வார்டு கவுன்சிலர் மஞ்சுளா சம்பத் குமார், 4ம் வகுப்பை பாதியில் நிறுத்தியவர். அதேநேரம், 55 கவுன்சிலர்கள் டிகிரி படித்துள்ளார். கலை, அறிவியல் என பல படிப்புகளில் டிகிரி பெற்றுள்ளனர்.

அத்திகுப்பே வார்டு கவுன்சிலர், ராஜு எம்பிபிஎஸ் படித்து, எம்.எஸ் மேற்படிப்பும் படித்துள்ளார். இவர்தான் கவுன்சிலர்களில் உயர்படிப்பு படித்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+