Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலாபவன் மணி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை.. உம்மன் சாண்டி உறுதி

Subscribe to Oneindia Tamil

சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கலாபவன் மணி வீட்டுக்கு இன்று சென்று துக்கம் விசாரித்த பிறகு இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த, மார்ச் 6ம் தேதி மரணமடைந்த, 45 வயதான கலாபவன் மணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், சாலக்குடியிலுள்ள அவரின் வீட்டுக்கு, முதல்வர் சாண்டி இன்று சென்றார்.

Oommen Chandy visit the house of late Malayalam actor Kalabhavan Mani

உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய சாண்டியிடம், கலாபவன் மணி சாவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தடயவியல் ஆய்வு அறிக்கை வந்த உடன், உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உம்மன் சாண்டி அப்போது உறுதியளித்தார்.

ஹைதராபாத்திலுள்ள தடயவியல் ஆய்வகத்தில், கலாபவன் மணி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் விஷம் கலந்திருந்ததா என்பதற்கான விடை ஆய்வு முடிவில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+