லலித் மோடிக்கு ஆதரவாக வசுந்தரராஜே கடிதம்.. அம்பலப்படுத்தியது காங்கிரஸ்- ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!
டெல்லி: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விசா பெற உதவ ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா எழுதிய கடிதத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் பதவியை வசுந்தரராஜே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கி தற்போது இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் லலித் மோடி. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு அவர் செல்வதற்கு மத்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் உதவினார்கள் என்பது பெரும் சர்ச்சையானது.

மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியாக சுஷ்மா ஸ்வராஜ் கூறி உள்ளார். ஆனால், தான் அப்படி உதவி எதுவும் செய்யவில்லை என்று வசுந்தரா ராஜே கூறி உள்ளார்.
இந்த நிலையில் லலித் மோடிக்கு விசா வழங்கக் கோரி, வசுந்தரா ராஜே எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.
18.8.2011-ந் தேதியிட்ட அந்த கடிதத்தில் லலித் மோடிக்கு விசா வழங்க ஆதரவாக வசுந்தரா ராஜே எழுதி இருப்பதோடு, தான் இவ்வாறு உதவி செய்வது பற்றி இந்திய அரசுக்கு தெரியக்கூடாது என்று குறிப்பிட்டு இருப்பதாகவும், அதில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தம் மீதான குற்றச்சாட்டை வசுந்தரா ராஜே முன்பு மறுத்த போதிலும் இப்போது ரகசியம் வெளியாகிவிட்டது என்று கூறிய ஜெய்ராம் ரமேஷ் அவர் ராஜினமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் குறிப்பிட்டார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications