ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 16வது நாளாக முடங்கியது ராஜ்யசபா
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள்முதல் ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபாவில் முழக்கமிட்டன. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பகல் 12 மணி வரை ராஜ்ய சபா ஒத்திவைக்கப்படுவதாக குடியரசு துனை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார். பின்னர், 12 மணிக்குப் பிறகு ராஜ்யசபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 3 மணிக்கு ராஜ்ய சபா மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரில் ராஜ்ய சபா 16வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications