சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமர்சிங் நியமனம்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமர்சிங்கை நியமிப்பதாக முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பராக இருந்த அமர் சிங் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து தனிக் கட்சி தொடங்கிய அமர் சிங், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர், ராஷ்டீரிய லோக் தளம் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, முலாயம் சிங்கிற்கு, அமர் சிங்கிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கியதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினரானார் அம்ர்சிங்.
இந்த நிலையில், அவரை சமாஜ்வாடியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிப்பதாக முலாயம் சிங் அறிவித்தார். இது தொடர்பாக முலாயம் சிங் தனது கைப்பட அமர்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ''நீங்கள் சமாஜ்வாடியின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறீர்கள். உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் கட்சியை நீங்கள் பலப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தை மாநில சமாஜ்வாடி தலைவர் சிவ்பால் சிங் ஊடகங்களிடம் வெளியிட்டார். அமர்சிங், சிவ்பால் சிங்கின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஏற்கனவே சமாஜ்வாடியின் தேசிய செயலாளர்களாக பதவி வகித்து வரும் ராம்கோபால் யாதவ், உ.பி. அமைச்சர் முகமது அசம்கான் ஆகியோருடன் இணைந்து அமர்சிங் பணியாற்றுவார்.
சமாஜ்வாடியில் மீண்டும் இணைந்த அமர்சிங் குறித்து கட்சியில் வெளியாட்கள் தலையீடு இருந்தால் கட்சியை நடத்துவது சிரமம் என்று மறைமுகமாக சாடியிருந்தார் அகிலேஷ் .
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications