பீகார் மாநில போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் – 1000 பேர் அதிரடி கைது!
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான தேர்வு கடந்த 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் சுமார் 13 நாட்கள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடைபெற்றது.
அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் 200 பேர் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் , "போலீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தங்களுக்கு பணம் அளித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட கூறியதாக" தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணையை தீவிரப்படுத்தும் போது வரும் நாட்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு அவர்களி்ன் பெற்றோர்கள்,உறவினர்கள் உதவியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை இதன்மூலமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications