கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருமை.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டு
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மேலாண்மை சிறப்பாக நடைபெறுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
குறிப்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பஞ்சாயத்துகளின் பணி முக்கியமானது. நாட்டிலேயே முதன்முறையாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்தான், மாவட்ட கலெக்டர்களுக்கு ஈடான அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, மாநிலம் முழுக்க நோய் கட்டுப்படுத்தப்பட்டது. கஞ்சம் மாவட்டத்தில் கூடுதலாக பலன் கிடைத்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒடிசா மாநில அரசின் கொரோனா தடுப்பு நிர்வாகம் பாராட்டை பெற்று வருகிறது. ஐரோப்பாவை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், 310 நகரங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு நோய்த்தடுப்பு பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்:
கஞ்சம் மாவட்டத்தில், முதல் கொரோனா நோயாளி மே 2ம் தேதி, கண்டறியப்பட்டது. இப்போது அங்கு 188 நோயாளிகள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து தலைவருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதால், வீடு, வீடாக சென்று பரிசோதனைகளை நடத்தினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் கை கொடுத்தார்கள்.
5 கிராமங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற விகிதத்தில் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியில் கட்டுப்பாடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications