செக்ஸ் தொல்லை புகார்: 'நோபல்' பச்சௌரிக்கு முன்ஜாமீன், 'டிஇஆர்ஐ'க்குள் நுழைய தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 29 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரிக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தில் (டிஇஆர்ஐ) பணிபுரியும் 29 வயது பெண் ஒருவர் நிறுவன தலைவரும், ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவருமான ஆர்.கே. பச்சௌரி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக டெல்லி போலீசில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆர்.கே. பச்சௌரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

Pachauri granted bail till March 27, barred from entering TERI

இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே உடல் நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம் பச்சௌரிக்கு மார்ச் 27ம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் டிஇஆர்ஐ நிறுவனத்திற்குள் நுழையவும், அதன் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும், வெளிநாடுகளுக்கு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2002ம் ஆண்டில் இருந்து ஐபிசிசி தலைவராக இருந்த பச்சௌரி அந்த பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

2007ம் ஆண்டு ஐபிசிசி அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை ஐபிசிசி சார்பில் பெற்றவர் பச்சௌரி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+