14 நாள் விசாரணையில் பாக். தீவிரவாதி நவேத்தை எடுத்தது தேசிய புலனாய்வு ஏஜென்சி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் யாகூப்பை, 14 நாள் காவலில் எடுத்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.
கடந்த வாரம் நடந்த உதம்பூர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.

உதம்பூரில் நடந்த சம்பவத்தின்போது அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாபுப் படையினர் திருப்பிச் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்தியத் தரப்பில் 2 பேர் பலியானார்கள். யாகூப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
லஷ்கர் இ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டவன் யாகூப். யாகூப் தங்களது பிள்ளைதான் என்பதை அவனது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் யாகூப்பை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்ல முயலலாம் என்ற அச்சுறுத்தல் இருப்தபால், அவனை டெல்லிக்கு மாற்றும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை யாகூப்பை தேசிய புலனாய்வு ஏஜென்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் போலீஸார்.
இதையடுத்து 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளான் யாகூப். அங்கு பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரிக்கப்படவுள்ளான்.
யாகூப்புடன் இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்த நோமன் என்ற தீவிரவாதி உதம்பூர் தாக்குதலின்போது கொல்லப்பட்டு விட்டான் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications