14 நாள் விசாரணையில் பாக். தீவிரவாதி நவேத்தை எடுத்தது தேசிய புலனாய்வு ஏஜென்சி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் யாகூப்பை, 14 நாள் காவலில் எடுத்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.
கடந்த வாரம் நடந்த உதம்பூர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.

உதம்பூரில் நடந்த சம்பவத்தின்போது அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாபுப் படையினர் திருப்பிச் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்தியத் தரப்பில் 2 பேர் பலியானார்கள். யாகூப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
லஷ்கர் இ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டவன் யாகூப். யாகூப் தங்களது பிள்ளைதான் என்பதை அவனது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் யாகூப்பை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்ல முயலலாம் என்ற அச்சுறுத்தல் இருப்தபால், அவனை டெல்லிக்கு மாற்றும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை யாகூப்பை தேசிய புலனாய்வு ஏஜென்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் போலீஸார்.
இதையடுத்து 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளான் யாகூப். அங்கு பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரிக்கப்படவுள்ளான்.
யாகூப்புடன் இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்த நோமன் என்ற தீவிரவாதி உதம்பூர் தாக்குதலின்போது கொல்லப்பட்டு விட்டான் என்பது நினைவிருக்கலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications