இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்-பாகிஸ்தான் ராணுவம் இணைந்த கூட்டுப்படை உருவாகிறது
டெல்லி: எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகளையும், இந்திய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தச் செய்ய வைக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் ஒரு புதிய தீவிரவாத அமைப்பை 'உருவாக்கி' உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வழக்கமான போர்முறைகளால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான், தீவிரவாதிகளை துணைக்கு சேர்த்துக் கொண்டுள்ளது. இடாரா-டுல்-பாகிஸ்தான் (ஐடிபி) என்ற தீவிரவாத அமைப்புதான் இதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த தீவிரவாத அமைப்பை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு உருவாக்கியுள்ளது.

ராணுவத்துடன் கலப்பு
பாகிஸ்தான் முன்னாள் விமானப்படை வீரர் அட்னான் ரஷித் தலைமையிலான இந்த தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தானின் விமானம், ராணுவம் மற்றும் கப்பல்படையுடன் இணைப்பதில் பங்கு வகிக்கிறது.

இறக்குமதி தீவிரவாதிகள்
பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளை மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்தும் தீவிரவாதிகளை இறக்குமதி செய்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தூண்டிவருகிறது இந்த அமைப்பு.

தாக்குதல் மோசமாக இருக்கும்
பாகிஸ்தான் ராணுவத்திற்காவது உயிர் பயம் இருக்கும். ஆனால் ஐடிபி தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அந்த பயமும் கிடையாது. மேலும், கடவுளுக்காக இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற கொள்கை அவர்களுக்கு உள்ளது. எனவே தாக்குதலின் வேகம் அதிகமாக இருக்கும் ஆபத்து உள்ளது.

அல்கொய்தா
இதனிடையே, அல்கொய்தா தனது கிளையை இந்தியாவில் திறப்பதாக கூறியிருந்த நிலையில், அவர்களையும், இந்தியாவிற்குள் செயல்படும் சிமி போன்ற தீவிரவாத அமைப்புகளையும் ஒன்றிணைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முயன்று வருகிறது. இந்த தகவல்கள் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால், இந்திய ராணுவமும், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications