ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை கண்டு நடுங்கும் பாகிஸ்தான்! ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசு அமராவதியை தனது தலைநகராக உருவாக்க முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அங்கு அணு குண்டு தயாரிக்க இந்தியா திட்டம் வைத்துள்ளதாக பாகிஸ்தான் டிவி சேனலில் விவாத நிகழ்ச்சியே நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி, தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டு, ஹைதராபாத் அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆந்திர அரசு, தனக்கென ஒரு தலைநகரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

தலைநகரம் அனைத்து நவீன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார். எனவே கிருஷ்ணா நதியை ஒட்டியுள்ள அமராவதியை தலைநகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நகரில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணியை, மகி மற்றும் அசோசியேட் என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஆந்திர அரசு அளித்துள்ளது. சமீபத்தில், தலைமைச் செயலக மாதிரியை அந்த நிறுவனம் அரசிடம் அளித்தது. ஆனால், அந்த டிசைன் பிடிக்கவில்லை என அரசு நிராகரித்துவிட்டது.
கூடங்குளம் அணு உலை அல்லது தாஜ்மகாலின் மேற்பரப்பு போல குவிந்த நிலையில் உள்ள மேற்பரப்பு கொண்ட கட்டிடத்தை தலைமைச் செயலகமாக உருவாக்க அந்த நிறுவனம் முன்வந்ததால், அதை ஆந்திர அரசு ஏற்கவில்லை.
ஆனால், இந்த வடிவமைப்பை பார்த்து அமராவதியில் அணு குண்டு தயாரிக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாக அங்குள்ள டிவி மீடியா ஒன்று சமீபத்தில் விவாத நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
குறிப்பாக ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத்தான் இந்த நகரம் உருவாக்கப்படுவதாகவும், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், அமராவதிக்கு வந்து செல்வதாகவும், இது தங்கள் சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் அந்த டிவி சேனல் விவாதத்தில் பேசியுள்ளனர்.
ஆந்திர டிவி சேனல் ஒன்று நேற்று இந்த விவாத நிகழ்ச்சி துணுக்குகளை தங்களது சேனலில் ஒளிபரப்பியது. இதை பார்த்த ஆந்திர மக்கள் பாகிஸ்தான் பண்டிதர்களை நினைத்து, சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications