ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை கண்டு நடுங்கும் பாகிஸ்தான்! ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசு அமராவதியை தனது தலைநகராக உருவாக்க முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அங்கு அணு குண்டு தயாரிக்க இந்தியா திட்டம் வைத்துள்ளதாக பாகிஸ்தான் டிவி சேனலில் விவாத நிகழ்ச்சியே நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி, தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டு, ஹைதராபாத் அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆந்திர அரசு, தனக்கென ஒரு தலைநகரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

தலைநகரம் அனைத்து நவீன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார். எனவே கிருஷ்ணா நதியை ஒட்டியுள்ள அமராவதியை தலைநகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நகரில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணியை, மகி மற்றும் அசோசியேட் என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஆந்திர அரசு அளித்துள்ளது. சமீபத்தில், தலைமைச் செயலக மாதிரியை அந்த நிறுவனம் அரசிடம் அளித்தது. ஆனால், அந்த டிசைன் பிடிக்கவில்லை என அரசு நிராகரித்துவிட்டது.
கூடங்குளம் அணு உலை அல்லது தாஜ்மகாலின் மேற்பரப்பு போல குவிந்த நிலையில் உள்ள மேற்பரப்பு கொண்ட கட்டிடத்தை தலைமைச் செயலகமாக உருவாக்க அந்த நிறுவனம் முன்வந்ததால், அதை ஆந்திர அரசு ஏற்கவில்லை.
ஆனால், இந்த வடிவமைப்பை பார்த்து அமராவதியில் அணு குண்டு தயாரிக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாக அங்குள்ள டிவி மீடியா ஒன்று சமீபத்தில் விவாத நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
குறிப்பாக ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத்தான் இந்த நகரம் உருவாக்கப்படுவதாகவும், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், அமராவதிக்கு வந்து செல்வதாகவும், இது தங்கள் சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் அந்த டிவி சேனல் விவாதத்தில் பேசியுள்ளனர்.
ஆந்திர டிவி சேனல் ஒன்று நேற்று இந்த விவாத நிகழ்ச்சி துணுக்குகளை தங்களது சேனலில் ஒளிபரப்பியது. இதை பார்த்த ஆந்திர மக்கள் பாகிஸ்தான் பண்டிதர்களை நினைத்து, சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
-
செல்போனில் வந்த மர்ம லிங்கால் 12 லட்சத்தை இழந்த எம்எல்ஏ.. பவன் கல்யாண் ஆதரவாளர் ஏமாந்தது எப்படி -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications