பாகிஸ்தான் பிரதமர், ராணுவம் நடுவே மோதல்? இந்திய தாக்குதல் பற்றி ஆளுக்கொரு கருத்து
டெல்லி: இந்தியா தங்கள் எல்லைக்குள் வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், அது துப்பாக்கி சூடு என்றும் பாகிஸ்தான் ராணுவம் செய்திக்குறிப்பு வெளியிட்ட நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரிப்போ, தாக்குதலுக்காக இந்திய அரசை கண்டித்துள்ளார். பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்குமே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் டெல்லியில் பேட்டியளித்ததும், அவசர அவசரமாக மறுத்தது பாகிஸ்தான் ராணுவம். இந்திய எல்லையிலிருந்து அத்துமீறி ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், எல்லை புகுந்து வந்து தாக்குதல் நடத்தவில்லை என்றும் ராணுவம் கூறியது. மேலும் பாகிஸ்தானின் 2 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும் அது கூறியது.

அதேநேரம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்போ, இந்தியா கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து மறுபக்கம் பேட்டியளித்துவிட்டார். தாக்குதல் நடந்ததை வெளியே சொன்னால் வெட்கக்கேடு என ராணுவம் நினைக்கிறது. தாக்குதலை வெளியே சொல்லி இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திரட்ட நவாஸ் ஷெரிப் முயன்றார்.
ஏனெனில், இந்தியா அறிவித்த பிறகுதான், 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டது. முதலிலேயே அந்த நாட்டு ராணுவம் வாய் திறக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா மீது பழி போட முயலவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் அந்த சம்பவத்தை மூடி மறைக்கவே முயன்றது. ஆனால் இந்தியா அம்பலப்படுத்தியதை எதிர்பார்க்காத அந்த நாட்டு ராணுவமும், பிரதமரும் ஆளுக்கொரு கருத்தை அவசரமாக சொல்லி மாட்டிக்கொண்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications