Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் படகு விவகாரம்: கடலோர காவல்படை டி.ஐ.ஜி. மறுப்பு! பாதுகாப்பு அமைச்சர் வார்னிங்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க தாம் உத்தரவிட்டதாக வெளியான ஊடகங்களின் தகவலை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்துக்கு முரண்பாடான வகையில் லோஷாலி கருத்து தெரிவித்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Pakistan terror boat case: Video nails DIG Coast Guard's comments, Parrikar stands by government's version

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி அருகே கேத்திபந்தர் என்ற இடத்தை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று கடந்த டிசம்பர் 31-ந் தேதி இரவு குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவியது.

கடலோர காவல்படை கப்பல் அந்த படகை விரட்டிச்சென்றது. இதனால் பயந்துபோன படகில் இருந்த 4 பேரும் உடனடியாக படகின் கீழ்தளத்துக்கு ஓடி, படகுக்கு தீ வைத்தனர். இதில் அந்த படகு வெடித்து சிதறியது. படகில் இருந்த 4 பேரும் பலியாயினர்.

படகில் இருந்த 4 பேரும் தற்கொலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடைபெற்ற மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்துவதற்காக வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் ஊடுருவல் சம்பவம் நடைபெற்றதையடுத்து நாடு முழுவதும் உள்ள கடலோர எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க தான் உத்தரவிட்டதாக வெளியான தகவலை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி உத்தரவிட்டார் என்று கடந்த ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. "தீவிரவாத படகை தகருங்கள்.... அவர்களுக்கு நாம் பிரியாணி வழங்கிசேவை செய்ய வேண்டாம்..." என்று லோஷாலி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இவ்விவகாரத்தில் அரசு கூறியதற்கும், இந்த தகவலுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளியிட்டுள்ள பி.கே. லோஷாலி, அந்த ஆபரேஷன் என்னுடைய தலைமையில் நடைபெறவில்லை; இதுதொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

"எந்த தகவல்கள் மீடியாவில் வெளியானது...... அது உண்மையானது இல்லை. அதுஎன்னுடைய உரையில்லை. நான் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டது இல்லை. இருப்பினும், தேசத்திற்கு எதிரான சக்திகளுக்கு பிரியாணி வழங்கி சேவை செய்ய தேவையில்லை மற்றும் சட்டத்தின்படி நடத்தப்பட வேண்டியது இல்லை என்று நான் பேசியிருக்கிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

பாரிக்கர் எச்சரிக்கை

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் படகு விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் என்ன அறிவித்ததோ அதுதான் இப்போதும்... ஆனால் இந்த கருத்துக்கு மாற்றக் கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. தெரிவித்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+