எல்லையில் பாக்., அத்துமீறி தாக்குதல்... இந்திய ராணுவம் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தின.
பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி நெடுகிலும், பாகிஸ்தான் படைகள் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது, குடியிருப்புகளிலும் குண்டுகள் தெறித்து வந்து விழுந்தன.
எனினும், மக்களின் பாதுகாப்பு கருதி இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஒற்றுமை தினம் இன்று கடைபிடித்து வரும் வேளையில், அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதற்கிடையே, ஒற்றுமை தினத்தையொட்டி, காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணப்பட வேண்டும் என பாகிஸ்தான் தலைவர்கள் வழக்கம் போல கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, குடியரசுத் தினவிழா அன்று நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
#JammuAndKashmir: Pakistan violated ceasefire along the Line of Control (LoC) in Krishna Ghati sector of Poonch at around 10:30 am today. pic.twitter.com/YmQHHdw2Ol
— ANI (@ANI) February 5, 2019