டவுன் பஸ் போல.. பயணிகளை நிற்க வைத்து பயணித்த கராச்சி-மெக்கா விமானம்! அதிகாரிகள் விசாரணை
கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் இருந்து சவுதி அரேபியா சென்ற விமானத்தில் இருக்கைகளுக்கு இடையே 7 பயணிகளை நிற்க வைத்து அழைத்து சென்றது குறித்து அந்நாட்டு விமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டின் சர்வதேச விமான நிறுவனத்தின் போயிங் ரக 777 விமானத்தில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி கராச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்துக்கு சென்றது. அந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 409 இருக்கைகள் உள்ளன.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பிறகும் அதில் கூடுதலாக 7 பயணிகளை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இது விமான போக்குவரத்து விதிமீறலாகும். இதுகுறித்த விசாரணையில் அந்த 7 பயணிகளும் இருக்கைகளுக்கு இடையே நிற்க வைத்து மெக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டது தெரியவந்தது.
தடை செய்யப்பட்ட விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கும் போர்டிங் பாஸ், அந்த 7 பேருக்கும் கையால் எழுதப்பட்டு வழங்கப்பட்டதும், டிராபிக் அதிகாரியிடம் கணினியால் உருவாக்கப்பட்ட பட்டியல் மட்டுமே வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
பொதுவாக விமானப் பயணிகளுக்கு ஆக்ஸிஜன் கருவிகள் அவரவர் இருக்கையில் இருக்கும். இதை பயணிகள் அவசரகாலங்களில் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் இந்த விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்த பயணிகளுக்கு ஆக்ஸிஜன் கருவி வழங்க முடியாது. இச்செயலானது பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே காட்டுகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications