குஜராத்தில் அகதிகளாக தஞ்சமடையும் பாக். மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடையும் பாகிஸ்தான் நாட்டு மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்வது அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாகிவிட்டது. அத்துடன் சிறூபான்மை இந்துக்களின் பாதுகாப்பும் அங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதனால் அங்கிருந்து மருத்துவர்கள் வெளியேறி கட்ச் வழியாக அகமதாபாத்துக்கு அகதிகளாக வந்துவிடுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 20 மருத்துவர்கள் இப்படி அகதிகளாக வந்துள்ளனர்.

1970ஆம் ஆண்டு 8 பேரும் கார்கில் போருக்குப் பின்னர் 9 மருத்துவர்களும் இப்படி வெளியேறி குஜராத்தில் அடைக்கலமாகினர். அதன்பின்னர் கடந்த ஆண்டு மட்டுமே 20 மருத்துவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி குஜராத்தில் அடைக்கலமாகியுள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைதான்.

ஆனால் மாநில அரசிடம் பதிவு செய்யாத பாகிஸ்தான் மருத்துவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+