குஜராத்தில் பாக். தேசியக் கொடியை வாட்ஸ் அப் புரபைல் படமாக வைத்த மேலும் ஒருவர் கைது!
பூஜ்: குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தானை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடியை வாட்ஸ் அப் புரபைல் படமாக வைத்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது கட்ச் பிரதேசம். கடல் வழியாகவும் தரை வழியாகவும் கட்ச் பிரதேசம் பாகிஸ்தானுடன் எல்லையாக இருக்கிறது.

அண்மையில் கட்சி பகுதியைச் சேர்ந்த சிலர் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தங்களது புரபைல் படமாக பாகிஸ்தான் தேசியக் கொடியை வைத்திருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அப்தாசா அருகே பைதரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹூசைன் ஃபகீர் என்பவர் வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் தேசியக் கொடியை புரபைல் படமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகள் பறக்கவிடும் சம்பவங்கள் தொடர் கதையாகும் நிலையில் குஜராத்திலும் பாகிஸ்தான் ஆதரவு குரல்கள் எழத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.,












Click it and Unblock the Notifications