மிஸ்டர் ராகுல்... "அரண்மனை சதி"க்காக நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கக் கூடாது: அருண் ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமக்கு எதிராக பிரியங்காவை களம் இறக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சித்து வருவதால் ஏற்படும் கோபத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தக் கூடாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
லோக்சபாவில் மத மோதல்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி மறுத்தார்.
இதைத் தொடர்ந்து திடீரென எழுந்த ராகுல் காந்தி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். மேலும் சபாநாயர் சுமித்ரா பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கூறியதாவது:
- காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ராகுலின் சகோதரியான பிரியங்காவை தீவிர அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
- ராகுலின் தலைமைக்கு எதிராகத்தான் காங்கிரஸ் தலைவர்கள் இப்படி பேசி வருகின்றனர்.
- தனக்கு போட்டியாக பிரியங்காவை களம் இறக்குவதால் ராகுல் ஆத்திரத்தில் இருக்கிறார்.
- ராகுலுக்கு போட்டியாக பிரியங்கா களம் இறக்கப்படுவது என்பது அரண்மனை சதி.
- இந்த அரண்மை சதியை அரண்மனையில்தான் வைத்து எதிர்கொள்ள வேண்டும்.
- தனக்கு எதிரான அரண்மனை சதியினால் ஏற்பட்ட கொந்தளிப்பை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வெளிப்படுத்தக் கூடாது.
- ராகுல் காந்தி இப்படி நாடாளுமன்றத்தில் வெற்று முழக்கமிடுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை.












Click it and Unblock the Notifications