பாராட்டு விழாவில் பங்கேற்க சென்ற முண்டே மரணம்: கண்ணீர் வடிக்கும் கிராமம்
பீட்: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் அடைந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் உள்ள அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று பாஜக ஆஜதரவாளர்கள் கடவுளை வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது சொந்த ஊரான மகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி வஜிநாத் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை பார்லியில் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சராக பதவியேற்ற முண்டேவுக்கு பீட் மாவட்டத்தில் இன்று மாலை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள தான் அவர் டெல்லி விமான நிலையத்திற்கு செல்கையில் விபத்தில் சிக்கினார்.












Click it and Unblock the Notifications