ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய ஆதார், பான் கார்டு கட்டாயம்: தெற்கு ரயில்வே

முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்வற்கு ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்வற்கு ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

 PAN Card and Adhaar Card Mandatory in railway

இதையடுத்து தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை ரயில் டிக்கெட் மூலம் வெள்ளையாக மாற்ற பலரும் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஆதார், பான்கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் டிக்கெட் கட்டணம் பயணிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் ஆதார், பான் கார்டு எண்ணுடன், வங்கி கணக்கு எண்ணையும் சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மாற்ற முயற்சி செய்பவர்களை கட்டுப்படுத்த பான் கார்டு, ஆதார் கார்டு எண்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்து, அதை உடனே திரும்ப பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+