உ.பி.,யில் பூனை என நினைத்து சிறுத்தை வாலைப் பிடித்து இழுத்த விபரீதம்
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தின் பரிதாபத் அருகே உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் ஒரு வீட்டில் புகுந்த சிறுத்தையை, பூனை என நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்த கிராமவாசி உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பிலால் நகரில் வளையல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் வசீம் அகமது. இவர் நேற்று இரவு தனது வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் விளக்கை ஏற்றினார்.

விளக்கின் ஒளியில் அறையின் மூலையில் நீண்ட வாலுடன் ஏதோ அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதை பூனை என நினைத்து அவர் அதன் வாலை பிடித்து அசைத்து வெளியே போகும்படி விரட்டியுள்ளார். இதனால், சினம் கொண்ட சிறுத்தை வசீமை நோக்கி கர்ஜித்தது. உடனே வசீம் அந்த அறையை சாத்திவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உபி மாநில வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை மீது மயக்க ஊசி போட்டு அதனை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரட் நகரில் புகுந்த ஒரு சிறுத்தை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பேரை தாக்கியது. அப்போது தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications