உ.பி.,யில் பூனை என நினைத்து சிறுத்தை வாலைப் பிடித்து இழுத்த விபரீதம்
உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தின் பரிதாபத் அருகே உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் ஒரு வீட்டில் புகுந்த சிறுத்தையை, பூனை என நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்த கிராமவாசி உயிர் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பிலால் நகரில் வளையல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர் வசீம் அகமது. இவர் நேற்று இரவு தனது வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் விளக்கை ஏற்றினார்.

விளக்கின் ஒளியில் அறையின் மூலையில் நீண்ட வாலுடன் ஏதோ அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதை பூனை என நினைத்து அவர் அதன் வாலை பிடித்து அசைத்து வெளியே போகும்படி விரட்டியுள்ளார். இதனால், சினம் கொண்ட சிறுத்தை வசீமை நோக்கி கர்ஜித்தது. உடனே வசீம் அந்த அறையை சாத்திவிட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்து விட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உபி மாநில வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை மீது மயக்க ஊசி போட்டு அதனை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரட் நகரில் புகுந்த ஒரு சிறுத்தை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பேரை தாக்கியது. அப்போது தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications