தந்தை, சித்தியிடம் சிக்கி சித்திரவதைக்குள்ளான 19 வயதுப் பெண் மீட்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயால் சித்ரவதைக்கு ஆளான 19 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
19 வயது இளம்பெண் ஒருவரை அவரது வளர்ப்புத் தாயோடு சேர்ந்து தந்தையும் அடித்து துன்புறுத்தி வருவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து என்.ஜி.ஓ. ஊழியர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணை மீட்டனர்.
{ventuno}
முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அப்பெண்ணை, சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘தாயின் மரணத்திற்குப் பின் அப்பெண் காப்பகம் ஒன்றில் வளர்ந்ததாகவும், கடந்த ஆண்டு அவரை மீண்டும் அவரது அப்பா வீட்டிற்கு அழைத்து வந்ததும்' தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அப்பெண்ணின் தந்தையைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications