சி.ஏ.ஜி.யில் குற்றச்சாட்டு... நிதின் கட்காரி பதவி விலக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சபைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை பங்குதாரராக கொண்டு இயங்கி வரும் புர்த்தி சாகர் நிறுவனம், மானிய திட்டங்களுக்கான விதிமுறைகளை மீறியதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராஜ்யசபாவில் கடந்த வெள்ளிக்கிழமை புயலை கிளப்பியது.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதால் சபை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பிரச்சினையால் 2-வது நாளாக நேற்றும் ராஜ்யசபா முடக்கியது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டன.
இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இன்றும் சபையில் எழுப்பின. லோக்சபாவில் நிதின் கட்காரி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து இரு சபைகளின் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆனாலும் இதை நிதின் கட்காரி தொடர்ந்து மறுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications