நாடாளுமன்ற தாக்குதல்: மைசூர் மனோரஞ்சன் வீட்டில் சேகுவேரா + விவேகானந்தர் புக்ஸ்- உளவுத்துறை குழப்பம்!
மைசூர்: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கர்நாடகாவின் மைசூர் மனோரஞ்சன் வீட்டில் உளவுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சேகுவேரா மற்றும் விவேகானந்தர் புத்தகங்கள் சிக்கின. இதனால் மனோரஞ்சன் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என உளவுத்துறையினர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகா மாநிலம் மைசூர் விஜயநகரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் மனோரஞ்சனும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து மைசூர் மனோரஞ்சன் வீட்டில் மத்திய உளவுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மனோரஞ்சனின் தந்தை தேவராஜ் கவுடா. தாயார் சைலஜா. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர் மனோரஞ்சன்.
மனோரஞ்சன் அறையில் பல்வேறு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை உளவுத்துறையினர் கைப்பற்றினர். இதில் சேகுவேரா, விவேகானந்தர் புத்தகங்களும் இருந்தன. அத்துடன் பல்வேறு புரட்சியாளர்கள் குறித்த நூல்களும் மனோரஞ்சன் அறையில் சிக்கி இருக்கின்றன.

அத்துடன் மனோரஞ்சனின் பெற்றோரிடமும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். இடதுசாரி சித்தாந்தத்தை முன்வைக்கும் சேகுவேரா, இந்து மத சீர்திருத்தவாதி விவேகானந்தர் என இருவேறு துருவ சித்தாந்தங்களின் புத்தகங்களை மனோரஞ்சன் வீட்டில் உளவுத்துறை கைப்பற்றினர். இதனிடையே தன் மகன் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் எனவும் மனோரஞ்சன் தந்தை தேவராஜ் கவுடா கூறியிருப்பதால் மனோரஞ்சன் எந்த அமைப்பின் பின்னணியை கொண்டவர் என முடிவுக்கு வருவதில் உளவுத்துறையினர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மனோரஞ்சனின் சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து அவரது செல்போன் மூலம் ஆராயப்பட்டது. அதிலும் முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லையாம். கடந்த 3 மாதங்களாக தமது சோசியல் மீடியா பக்கங்கள் அனைத்தையுமே மனோரஞ்சன் டீ ஆக்டிவேட் செய்து வைத்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் மனோரஞ்சன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications