எம்.பிக்களின் சம்பளத்தை "டபுள்" ஆக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை
டெல்லி: எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கு அதிகரிக்கவும், எம்.பிக்களுக்கான சம்பள நிர்ணயத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்திலும் 75 சதவீத உயர்வை அது பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு தற்போது சம்பளக் கமிஷன் இருப்பதைப் போல எம்.பிக்களுக்கும் ஒரு கமிஷனை நிறுவி குறிப்பிட்ட இடைவெளியில் சம்பள உயர்வை தானாகவே மேற்கொள்ளவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவானது மொத்தம் 60 பரிந்துரைகளைக் கூறியுள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு எம்.பிக்களின் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல டிஏ , எம்.பிக்ளுக்கு வழங்கப்படுவதில்லை ன்றும் கமிட்டி கூறியு்ளது.
தற்போது ஒரு எம்.பி மாதச் சம்பளமாக ரூ. 50,000 பெறுகிறார். இதை அப்படியே டபுள் ஆக்க கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

எம்.பிக்களுக்கான தினசரி படியை ரூ. 2000 என்பதிலிருந்து அதிகரிக்கவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. எம்.பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும்போது தினசரி படி அவர்களுக்கு கிடைக்கும்.
இந்த உயர்வானது நீண்ட காலக் கோரிக்கையாகும். தினசரி எங்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு டீ கொடுத்தாலே கூட ஒரு நாளைக்கு ரூ. 1000 வரை செலவாகி விடுகிறது. ஆனால் நம்மைத் தேடி வருவோருக்கு வெறும் டீயுடன் நின்று விட முடியாதே. எனவே தினசரி படியை அதிகரித்தால் நல்லது என்று ஒரு பாஜக எம்.பி கூறியுள்ளார்.
இந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தவர் பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி. யோகி ஆதித்யநாத் ஆவார். இவர் பரிந்துரைத்துள்ள பிற பரிந்துரைகள்:
முன்னாள் எம்.பிக்களுக்கு விமான கட்டணத்தில் 20 முதல் 25 சதவீத சலுகை தரப்பட வேண்டும். இது வருடத்திற்கு ஒருமுறை தரப்பட வேண்டும்.
முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 20,000 என்பதிலிருந்து மாதம் ரூ. 35,000 என்றஉ உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு சிட்டிங் எம்.பிக்Kளும் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியில் பயமிக்கக் கூடிய பாஸ் வழஹ்கப்பட வேண்டும். இது அவருடன் வரும் தனிச் செயலாளருக்காக வழஹ்கப்பட வேண்டும்.
தற்போது எம்.பிக்களும், அவர்களது கணவன் அல்லது மனைவிக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்த்கது. இதை செயலாளருக்கும் நீட்டிக்க கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
மேலும் எம்.பிக்களுக்கான பாக்கெட் மணியாக தற்போது ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்டுக்கான கட்டணம் தரப்படுகிறது. அதை முதல் வகுப்பு ஏசி டிக்கெட் கட்டணமாக மாற்ற வேண்டும்.
கமிட்டி கொடுத்துள்ள பல கோரிக்கைகள் மக்களின் வரிப்பணத்தை காலி செய்யும் வகையில் உள்ளதாகவும், எனவே இதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications