லலித் மோடியிடம் வாங்கிய பணம் எவ்வளவு? சுஷ்மா பதிலளித்தால் நாடாளுமன்றம் இயங்கும்: ராகுல் வார்னிங்
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்தால்தான் நாடாளுமன்றம் இயங்கும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கு உதவியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிமயமாக பேசினார்.

அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா என அவர் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது.
ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியிடம் தனது குடும்பம், மகள், கணவர் பெற்ற பணம் எவ்வளவு என்பதை சுஷ்மா ஸ்வராஜ், நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்றார்.
மேலும் நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் நாங்கள் அடிப்படை பிரச்சனைகளை எழுப்ப வேண்டும்; சுஷ்மா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. நமது பிரதமர் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கவேண்டும் என்பதை அவசியமாக கொள்ளவில்லை. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் கிரிமினல் லலித் மோடி இடையே நடைபெறும் வர்த்தகம் தொடர்பான உண்மையையும் பிரதமர் மோடி முற்றிலுமாக நிராகரிக்கிறார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications